கையடக்க தொலைபேசியில் தமிழ் இணையத்தளங்களை பார்க்க.

1. உங்கள் கையடக்க செல்லிட தொலைபேசியில் ( mobile phone) GPRS வசதியை உயிர்ப்பித்து(Active) கொள்ளவும்.
2. கையடக்க தொலைபேசி மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினியை தரவிறக்கி ( Download) உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
2. கையடக்க தொலைபேசி மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினியை தரவிறக்கி ( Download) உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
3. கையடக்க தொலைபேசியில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை ( browser) திறந்து கொள்ளுங்கள்.
4. பின்பு முகவரி இடும் இடத்தில் (Address Bar) opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
4. பின்பு முகவரி இடும் இடத்தில் (Address Bar) opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
5. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
(if enabled, text written with complex scripts will be rendered on the server instead of in your device.)
(if enabled, text written with complex scripts will be rendered on the server instead of in your device.)
6. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.
இனி உங்கள் கையடக்க தொலைபேசியில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றி பார்க்கலாம்.
உங்களது Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் எப்படி தெரிந்து கொள்வது???
நம்ம எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமா facebookபக்கம் திரும்பிகிட்டு இருக்கோம்னு சொல்லலாம். Orkut யில் நிறைய வசதிகள் இருந்தாலும்
Facebook பயன்படுத்துபவர்களுக்கு Orkut அந்நியமாக படுகிறது. இந்த பதிவும் Facebook Security ய பத்தியதுதான். ஆமாங்க Facebook என்ற தளத்தை நிறுவிய Mark Zuckerberg's Fan page யை சமீபத்தில் Hack செஞ்சுருக்காங்க நம்ம கில்லாடி Hackerகள். நம்ம Facebook கணக்கை வேறு யாரவது பயன்படுத்தினால் நாம் எப்படி பார்த்து தெரிந்து கொள்வது என்று பார்போம்.நம்முடைய பல Personal செய்திகளை Facebook தர துவங்கிவிட்டோம், இந்நேரத்தில் இதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
முதலில் Facebook.com-------->Account------>Account settings ---->Account security செல்லவும்.
மேலே உள்ளது போல் வந்த Window வில் உங்களது Account எப்பொழுது கடைசியாக பார்க்கப்பட்டது என்ற விவரங்கள் தெரியும்.நீங்கள் இல்லாமல் வேறு எந்த பகுதியில் இருந்து யாராவது உள்ளே வந்திருந்தால்,பக்கத்தில் இருக்கும் End Activity என்ற linkயை கிளிக் செய்து விடுங்கள்.மேலும் வேறு யாரவது உங்கள் கணக்கை பயன்படுத்த துவங்கினால் உங்களது email முகவரிக்கோ, அல்லது SMS மூலமாக உங்களுக்கு தகவல் வர மாதிரி செய்யலாம்.Send me a mail,Send me a text message என்ற இடத்தில Tick செய்து விடுங்கள்.வேலை முடிந்தது.
ஜிமெயிலில் குறிப்பிட்ட மின்னஞ்சலை தடை செய்வது எப்படி?
தற்போதைய இணைய உலகில் மின்னஞ்சல் சேவை என்பது பலருக்கும் அவசியமான ஒன்றாகிவிட்டது. சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கிறார்கள். மின்னஞ்சல் வைத்திருப்போருக்கு இருக்கும் பெரிய தொல்லை தங்களது நண்பர்களிடமிருந்து வருவதை விட விளம்பரங்கள் அடங்கிய மின்னஞ்சல்கள், Spam என்று சொல்லக்கூடிய குப்பை மின்னஞ்சல்களும் வருவதே. இந்த மாதிரி குப்பை மின்னஞ்சல்கள் அனுப்பும் நிறுவனங்கள் இணையத்தில் அங்கங்கே வெளியிடப்பட்டிருக்கும் நமது மின்னஞ்சல் முகவரிகளை சேகரித்து மொத்தமாக அனுப்புகின்றன.
மேலும் நமது மின்னஞ்சல் முகவரிகளை புதியவர்களுக்கு தெரியாத்தனமாக கொடுத்திருப்போம். தொல்லை செய்வதற்கு என இருக்கும் சிலர், பழகிய நண்பர்கள் கூட தேவையில்லாத ஆபாச மின்னஞ்சல்களை அனுப்பிவைப்பர். ஜிமெயில் கணக்கில் (Gmail Account ) குறிப்பிட்ட நபரின் மின்னஞ்சலையும் குறிப்பிட்ட தளத்திலிருந்து வரும் மின்னஞ்சல்களையும் எப்படி தடை செய்வது என்று பார்ப்போம்.
1. ஜிமெயில் கணக்கில் நுழைந்தவுடன் வலது மேல் ஒரத்தில் Create a Filter என்று இருக்கிறதா எனப்பாருங்கள். இல்லாவிட்டால் Settings -> Filters செல்லவும்.


2. பின்னர் From என்ற பெட்டியில் உங்களுக்கு வேண்டாத நபரின் மின்னஞ்சலை அடிக்கவும்.குறிப்பிட்ட தளத்திலிருந்து வரும் மின்னஞ்சல்களைத் தடுக்க “@amazon.com” இந்த மாதிரி கொடுக்கவும்.
ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களைத்தடுக்க ஒவ்வொன்றுக்கும் இடையில் | குறியீடைக்கொடுக்கவும்.
(எ.கா) mail1@example.com | mail2@example.com
3. பின்னர் Next step என்பதைக் கிளிக் செய்யுங்கள். இதில் மின்னஞ்சல்களை என்ன செய்ய வேண்டும் எனக்குறிப்பிட வேண்டும்.

இதில் Delete it என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும். மேலும் வலது ஒரத்தில் உள்ள Also apply Filter to _ conversations below என்பதையும் டிக் செய்யவும். இதனால் ஏற்கனவே வந்த மின்னஞ்சல்களும் தானாகவே அழிந்துவிடும். பின்னர் Create Filter என்பதை கிளிக் செய்து உறுதிசெய்யவும்.
4. இதில் உள்ள இன்னொரு வசதி என்னவென்றால் குறிப்பிட்டவரின் மின்னஞ்சல்களை அழிக்க வேண்டாம்; அவற்றை ஒரு தொகுப்பாக போட்டு அதற்கு பெயரிட்டுக்கொள்ள Skip the inbox( Archive it) என்பதை தேர்வு செய்து Apply the label பகுதியில் வேண்டிய பெயரை கொடுத்துக்கொள்ளவும். இவை மொத்தமாக குறிப்பிட்ட பெயரில் சேமிக்கப்பப்பட்டிருக்கும்.

5. இன்னும் சில மின்னஞ்சல்களை இதே மாதிரி தடை செய்ய
“ | “ குறியீடைக்கொடுக்கலாம். அல்லது மீண்டும் Create a Filter கிளிக் செய்து தடை செய்யலாம்.
மேலும் நமது மின்னஞ்சல் முகவரிகளை புதியவர்களுக்கு தெரியாத்தனமாக கொடுத்திருப்போம். தொல்லை செய்வதற்கு என இருக்கும் சிலர், பழகிய நண்பர்கள் கூட தேவையில்லாத ஆபாச மின்னஞ்சல்களை அனுப்பிவைப்பர். ஜிமெயில் கணக்கில் (Gmail Account ) குறிப்பிட்ட நபரின் மின்னஞ்சலையும் குறிப்பிட்ட தளத்திலிருந்து வரும் மின்னஞ்சல்களையும் எப்படி தடை செய்வது என்று பார்ப்போம்.
1. ஜிமெயில் கணக்கில் நுழைந்தவுடன் வலது மேல் ஒரத்தில் Create a Filter என்று இருக்கிறதா எனப்பாருங்கள். இல்லாவிட்டால் Settings -> Filters செல்லவும்.


2. பின்னர் From என்ற பெட்டியில் உங்களுக்கு வேண்டாத நபரின் மின்னஞ்சலை அடிக்கவும்.குறிப்பிட்ட தளத்திலிருந்து வரும் மின்னஞ்சல்களைத் தடுக்க “@amazon.com” இந்த மாதிரி கொடுக்கவும்.

(எ.கா) mail1@example.com | mail2@example.com
3. பின்னர் Next step என்பதைக் கிளிக் செய்யுங்கள். இதில் மின்னஞ்சல்களை என்ன செய்ய வேண்டும் எனக்குறிப்பிட வேண்டும்.

இதில் Delete it என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும். மேலும் வலது ஒரத்தில் உள்ள Also apply Filter to _ conversations below என்பதையும் டிக் செய்யவும். இதனால் ஏற்கனவே வந்த மின்னஞ்சல்களும் தானாகவே அழிந்துவிடும். பின்னர் Create Filter என்பதை கிளிக் செய்து உறுதிசெய்யவும்.
4. இதில் உள்ள இன்னொரு வசதி என்னவென்றால் குறிப்பிட்டவரின் மின்னஞ்சல்களை அழிக்க வேண்டாம்; அவற்றை ஒரு தொகுப்பாக போட்டு அதற்கு பெயரிட்டுக்கொள்ள Skip the inbox( Archive it) என்பதை தேர்வு செய்து Apply the label பகுதியில் வேண்டிய பெயரை கொடுத்துக்கொள்ளவும். இவை மொத்தமாக குறிப்பிட்ட பெயரில் சேமிக்கப்பப்பட்டிருக்கும்.

5. இன்னும் சில மின்னஞ்சல்களை இதே மாதிரி தடை செய்ய
“ | “ குறியீடைக்கொடுக்கலாம். அல்லது மீண்டும் Create a Filter கிளிக் செய்து தடை செய்யலாம்.

சீனாவில் உருவாகியுள்ள புதிய சிந்தனை உலகம் முழுவதிற்குமே புதிய விளக்காக ஒளி காட்டுகிறது.
சீனாவின் முக்கிய நகரங்களில் வாகன நெரிசல் கட்டுமீறிப் போய்விட்ட காரணத்தால் போக்குவரத்து ஸ்தம்பிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்க புதுவகையான தெருமூடி பேருந்து வண்டிகளை அறிமுகம் செய்யவுள்ளனர்.
வாகன நெருக்கடி கூடிய நகரங்களில் சாதாரண போக்குவரத்து வீதிகளின் மேலால் இது நகர்ந்து செல்லும். சுமார் ஆறு மீட்டர் அகலமும் 4.5 மீட்டர் உயரமும் கொண்டது. இதன் மேற்புறத்தில் 1200 பயணிகள் இருக்க முடியும். பயணிகள் ஏறவும் இறங்கவும் வசதியாக மேடைகள் போடப்படும். மணிக்கு 40 – 60 கி.மீ வேகத்தில் செல்லும்.

இந்தத் தெருமூடி பஸ்கள் நகரும்போது இவற்றின் கீழ்ப்புறமாக சாதாரண கார்கள் ஓடிச் செல்லும். ஒரு பாலம் ஓடுவதுபோல நகர்ந்து போகும். இதற்குள் நுழையும் போது கார்கள் மோதாமல் இருக்க சென்சர்கள் எச்சரிக்கையாக செயற்படும். இதற்குள்ளால் நுழைய முடியாத வாகனங்கள் வரும்போது சிக்னல் ஒலி எழுப்பும் உடனே பாரவண்டிகள் விலகிச் செல்லும். நமது நாட்டிலே ஆங்காங்கு காணப்படும் தெருமூடி மடங்களுக்கு சில்லுகளை பூட்டி, கூரையில் பயணிகளை ஏற்றி உருட்டிச் சென்றால் எப்படியிருக்கும் என்று கற்பனை பண்ணினால் இதன் உருவாக்க எண்ணத்தை புரிந்து கொள்ளலாம். இந்த பஸ்வண்டிக்கு தமிழில் என்ன பெயர் வைப்பதென்று தெரியவில்லை தற்போதைக்கு தெருமூடி பஸ்வண்டி என்று விளங்கிக் கொள்வோம். இதற் செயற்பாட்டை அறிய விரும்புவோர் கீழே தரப்பட்டுள்ள காணொளியைப் பார்த்தால் இதன் செயற்பாட்டு முறையை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். சீனத்தலைநகர் மொன்ரோகு மாவட்டத்தில் 168 கி.மீ தூரத்திற்கு இந்த பேருந்துகள் ஓடக்கூடியவாறு பாதைகள் போடப்படவுள்ளன.

இத்தகைய எண்ணத்தை நியூயோர்க் ரைம்ஸ் உட்பல பல பத்திரிகைகள் பாராட்டி சிறப்புக் கட்டுரைகளை எழுதியுள்ளன. உலகம் முழுவதும் உள்ள பெரு நகரங்களில் ஏற்பட்டுள்ள பாரிய வாகன நெருக்கடிகளை இத்தகைய பேருந்துகளால் தீர்க்க முடியும். சிறப்பாக இங்கிலாந்தின் மத்திய பகுதியில் இத்தகைய பேருந்துகளை ஓட விடுவது, சென்னை, டெல்கி போன்ற நகரங்களில் ஓடவிடுவது வாகன நெரிசலைக் குறைக்க பேருதவியாக அமையும். சீனாவில் உருவாகியுள்ள இந்தச் சிந்தனை உலகம் முழுவதிற்குமே புதிய விளக்காக ஒளி காட்டுகிறது.
ஒரு காலத்து இணையதளங்கள்;இணைய பிளேஷ்பேக்
பேஸ்புக் இமெயில் சேவையை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலம் இணைய ராஜாவான கூகுலின் ஜிமெயில் சேவையோடு மல்லுக்கட்ட தயாராகி உள்ள பேஸ்புக் மற்றொரு வகையிலும் கூகுலுக்கு எதிராக வியூகம் வகுத்துள்ளது.அதாவது பேஸ்புக் தனது பயனாளிகளை பேஸ்புக்கை அவர்களின் முகப்பு பக்கமாக வைத்து கொள்ள கோரி வருகிறது.இதற்காக பிரத்யேக பட்டன் ஒன்றையும் அறிமுகம்செய்துள்ளது.
தற்போது பெரும்பாலானோர் கூகுலையே முகப்பு பக்கமாக வைத்துள்ளனர்.அல்லது பலரும் முதலில் விஜயம் செய்யும் பக்கம் கூகுலாகவே இருக்கிறது.கூகுலின் சிறப்பான தேடல் சேவையே இதற்கு காரணம்.ஆனால் பேஸ்புக் இதனை மாற்ற விரும்புகிறது.
பேஸ்புக்கிலும் தேடல் வசதி உண்டு.அதோடு சமூக வலைப்பின்னல் சார்ந்த தேடலே எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்கின்றனர்.எனவே இணையத்தின் சக்தி வாய்ந்த தளம் என்னும் பெருமையை கூகுலிடம் இருந்து தட்டிப்பறிக்க பேஸ்புக் காய்களை நகர்த்துகிறது.
இந்த மவுன யுத்தம் ஒரு புறம் இருக்கட்டும்.இணைய உலகின் நம்பர் ஒன் அந்தஸ்து பேஸ்புக்கிற்கு கிடைக்கிறதா?அல்லது கூகுலின் ஆதிக்கம் அசைக்க முடியாமல் தொடருமா என்னும் கேள்வி எழுப்பபடும் இந்த கட்டத்தில் இணைய உலகை கொஞ்சம் திரும்பி பார்க்க வைக்கிறது பிசிவேர்ல்டு கட்டுரை.
இண்டெர்நெட்டை ஆட்சி செய்த 5 கட்டுரைகள் என்னும் தலைப்பிலான அந்த கட்டுரை ஒரு காலத்தில் இணையவாசிகள் மத்தியில் செல்வாக்கு பெற்று திகழ்ந்த 5 இணையதளங்களை சுட்டிக்காட்டுகிறது.
ஜியோசிட்டிஸ்,மைஸ்பேஸ்,ஸ்லாஷ்டாட்,ஹாட்மெயில்.மற்றும் அல்டாவிஸ்டா ஆகியவை தான் அந்த இணையதளங்கள்.
இதில் மைஸ்பேஸ் சமீப காலம் வரை இணைய உலகின் அபிமான சமூக வலைப்பின்னல் தளமாக விளங்கியது.அதாவது பேஸ்புக் பிரபலாமாகும் வரை.பேஸ்புக் எழுச்சிக்கு பிறகு மைஸ்பேசை யாரும் கண்டு கொள்வதில்லை.கொஞ்சம் பரிதாபம் தான் இது.
ஹாட்மெயில் உலகின் முதல் இணையம் சார்ந்த இமெயில் சேவை.ஒரு காலத்தில் இமெயில் என்றால் ஹாட்மெயில் என்று தான் இருந்தது.அதோடு ஹாட்மெயிலை உருவாக்கிய நம்மூர் சபீர் பாட்டியா அதனை மைக்ரோசாப்டிற்கு விற்று இணைய கோடீஸ்வரரான கதையும் மிக பிரபலம்.இன்று ஜிமெயில் யுகத்தில் ஹாட்மெயிலும் மறந்து போச்சு.சபீர் பாட்டியாவும் மறக்கப்பட்டு விட்டார்.
மைக்ரோசாப்டால் கூகுலையும் ஒன்றும் ஜீமெயிலையும் அசைக்க முடியவில்லை.
இன்று ஹாட்மெயிலை எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை.அதைவிட அல்டாவிஸ்டாவை எத்தனை பேருக்கு தெரியும் என்பது சுவையான கேள்வி?
ஒரு காலத்தில் அல்டாவிஸ்டா தான் இனைய உலகின் முன்னணி தேடியந்திரம்.மிகச்சிறந்து என்றும் கருதப்பட்டது.இன்றோ அல்டாவிஸ்டாவா அப்படியொரு தேடியந்திரமா என்று பலரும் கேட்க கூடும்.
ஆனால் தேடல் என்பது ஒரு கலையாக இருந்த காலத்தில் அல்டாவிஸ்டா தான் அசத்திக்கொண்டிருந்தது.அப்போதெல்லாம் இணையத்தில் தகவல்களை தேடி பெறுவது அத்தனை சுலப்ம அல்ல.முதலில் ஒரு கீவேர்டை போட்டு பார்க்க வேண்டும் .அது பலன் தரவில்லை என்றால் வேறு சில கீவேர்டுகளை மாற்றி போட்டு தேடிப்பார்க்க வேண்டும்.மேலும் அந்த காலத்தில் இணையத்தின் அனைத்து பக்கங்களும் தேடியந்திரங்களில் பட்டியலிடப்படவில்லை.
இப்படி ஒரு காலத்தில் தேடலின் ராஜாவாக அல்டாவிஸ்டா இருந்தது.ஆச்சர்யப்படும் வகையில் இன்றும் இந்த தேடியந்திரம் இருக்கிறது.அதிகம் பேர் பயன்படுத்துவதில்லை.
அதே போல சில ஆண்டுகளுக்கு முன் வரை ஸ்லாஷ்டாட் என்ரால் சும்மா அதிருத்துல்லே என்று கேட்க தோன்றும்.சுவையான மற்றும் தொழிநுட்ப சிறப்பு வாய்ந்த கட்டுரைகளுக்கு இனைப்பு கொடுத்து அறிமுகம் செய்த இந்த இனையதளம் கீக்களின் வேடந்தாங்கலாக திகழ்ந்தது.அதோடு இந்த தளத்தில் இணைப்பு கொடுக்கப்பட்டால் இணையவாசிகள் வந்து குவிந்து விடுவார்கள்.சில நேரங்களில் இனைப்பு தரப்பட்ட தளம் இணையவசிகளின் வருகை தாளாமல் திணறிப்போய் முடங்கியதும் உணடு.இது ஸ்லாஷ்டாட் விளைவு என்று குறிப்பிடப்பட்டு வந்தது.
ஆனால் டிக் போன்ற சமுக புக்மார்கிங் சேவை வந்த பிறகு ஸ்லாஷ்டாட் முக்கியத்துவம் இழந்துவிட்டது.இன்று அதன் அபிமானிகளூக்கான தளமாக அது சுருங்கிவிட்டது.
ஜியோசிட்டிஸ் இனையதளம் என்பது பெரிய விஷயமாக இருந்த காலத்தில் சொந்த இனையதளத்தை உருவாக்கி கொள்ளும் வசதியை அளித்த அற்புதமான தளம்.ஆனால் வலைப்பதிவுகளை உருவாக்கி கொள்வது எளிதான பின்னர் இதற்கு வேலையில்லாமல் போய்விட்டது.இந்த தளம் மூடப்பட்டும் விட்டது.
ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்த தளங்கள் பற்றிய நினைவுகள் வருத்ததையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தலாம்.
எல்லாம் சரி,இப்போது டாப் 5 தளங்கள் எவை என்று தெரியுமா?
கூகுல், பேஸ்புக், டிக், டிவிட்டர்,…ஐந்தாவது இடத்தில் உங்களுக்கு பிடித்தமான தளத்தை சேர்த்து கொள்ளுங்கள்..
இணைய உலகில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திவரும் கூகிளானது மிகவும் இரகசியமான முறையில் Facebook சமூக வலைத்தளத்திற்கு போட்டியாக புதியதொரு சமூக வலைத்தளமொன்றினை உருவாக்கி வருகின்றது.
Google me என்னும் பெயரில் அமைந்த இந்த வலைத்தளமானது மிகவும் இரகசியமான முறையிலே உருவாக்கப்பட்டு வருகின்றது. சமூக வலைத்தளங்களின் ஆராய்ச்சிகளில் பிரபல்யம் பெற்று விளங்கும் எடம் டி அஞ்சேலோ (Adam D Angelo) என்பவர் இந்த தகவலை உருத்திப்படுத்தியுள்ளார். இது ஒரு வதந்தியல்ல எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் கிடைத்த தகவல் எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே Google Buzz என்னும் twitter க்கு போட்டியாக உருவாக்கிய கூகிள் Google me என்னும் சமூக வலைத்தளத்தினையும் விரைவில் அறிமுகப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும் Facebook உடன் போட்டியாக அமையுமா என்பதினை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.