செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

இலங்கையில் விதவைகளாக 68,000 தமி்ழ்ப் பெண்கள்!

இலங்கையில் 68,000 தமிழ்ப் பெண்கள் கணவனை இழந்த விதவைகளாக வாழும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்த சண்டையில் தமிழ் இளைஞர்கள் பலர் உயிர் இழந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கை அரசு தோராயமான கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.

இதில் 68,000 பெண்கள் விதவைகளாக இருப்பது தெரிய வந்தது. இவர்களது கணவர்களை இலங்கை இராணுவம்  போரில் கொன்று குவித்துள்ளது. மேலும், கடந்த 2004ம் ஆண்டு எற்பட்ட சுனாமியிலும் பல ஆண்கள் உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கை முழுவதும் நடந்த கணக்கெடுப்பில் தமிழர்கள்  பகுதியில்தான் மிக அதிக அளவில் விதவைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

தற்போது இங்கு தோராயமாக மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டுள்ளது. எனவே, மிக துல்லியமாக கணக்கெடுப்பு நடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக