ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

விழ விழ எழுவோம்.....

" தோல்வி என்பது

சிந்திக்கத் தெரியாதவனின்

சித்தாந்தம்....

நிலவை தொட்டது

மூன்று தோல்விகளுக்கு

பிறகு தான் ".....




"சதா யோசி

மூளை ஒரு மிருகம்

தீனி போட்டுக் கொண்டே

இருக்க வேண்டும் ..

இல்லாவிட்டால் அது

தீயதைத் தின்று விடும் "


"உலகை

உலுக்கி உலுக்கி

எடுத்தவனெல்லாம்

துவக்கத்தில் ஒரு

தூசுப் படலமாக

இருந்தவன் தான் "


" ஒன்றைக் கவனித்துக்கொள்

இறங்கிப் போவதால்

என்றுமே நாம்

தாழ்ந்து போக மாட்டோம்


பள்ளத்தில் நதி

இறங்கிப் போகிறது

அதனால் அது மேடுகளில்

அசாதாரணமாகப்

பாய்கிறது "


" செய்ய நினைப்பதே

செய்வதினுடைய

பாதி வெற்றி தான்

எடுக்கும் முடிவை

உடனே செயல்படு

முடியும் -முடிவும்

போகப்போக

நரைத்துப் போகக் கூடியவை ..."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக