" தோல்வி என்பது
சிந்திக்கத் தெரியாதவனின்
சித்தாந்தம்....
நிலவை தொட்டது
மூன்று தோல்விகளுக்கு
பிறகு தான் ".....
"சதா யோசி
மூளை ஒரு மிருகம்
தீனி போட்டுக் கொண்டே
இருக்க வேண்டும் ..
இல்லாவிட்டால் அது
தீயதைத் தின்று விடும் "
"உலகை
உலுக்கி உலுக்கி
எடுத்தவனெல்லாம்
துவக்கத்தில் ஒரு
தூசுப் படலமாக
இருந்தவன் தான் "
" ஒன்றைக் கவனித்துக்கொள்
இறங்கிப் போவதால்
என்றுமே நாம்
தாழ்ந்து போக மாட்டோம்
பள்ளத்தில் நதி
இறங்கிப் போகிறது
அதனால் அது மேடுகளில்
அசாதாரணமாகப்
பாய்கிறது "
" செய்ய நினைப்பதே
செய்வதினுடைய
பாதி வெற்றி தான்
எடுக்கும் முடிவை
உடனே செயல்படு
முடியும் -முடிவும்
போகப்போக
நரைத்துப் போகக் கூடியவை ..."


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக