வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

மட்டக்களப்பில் மீன்பிடிக்க சென்ற மூவரை காணவில்லை


மட்டக்களப்பு,வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி கல்குடா கடலோரத்திலிருந்து இயந்திரம் பொருத்தப்பட்ட வள்ளத்தில் இவர்கள் கடற்றொழிலுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேத்தாழையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சிவராசா (வயது 53), அவரது  மகன் சிவராசா ஜீவராஜ் (வயது 20)  மற்றும் செல்லப்பா மனோகரன் (வயது 45)  ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியத்திடம் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த மீனவர்கள் வழமையாக மீன் பிடித் தொழிலுக்குச் சென்றால் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்வது வழமை என்றும், கடந்த சில நாட்களாக தொடர்புகள் எதுவும் இல்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரனிடம் தெரிவித்ததையடுத்து அவர் இது தொடர்பாக கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் இது தொடர்பாக காணாமல் போனவர்களை கண்டுபிடிக்குமாறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக