ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

வன்னி மக்களின் சீமெந்துப் பொதிகள் 1500 திருடப்பட்டமை அம்பலம்!


இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தின் போது மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட சீமெந்து மூடைகளில் 1500 இற்கும் மேற்பட்ட மூடைகள் வவுனியா பல நோக்குக் கூட்டுறவுச்சங்க கட்டத் தொகுதியில் அரச அதிகாரி ஒருவரினால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இவை மேற்படி கட்டடத்தில் அடுக்கப்பட்டதாகவும் அவ்வேளையில் ஒரு சில சீமெந்து மூடைகளை மீள்குடியேறிய மக்களுக்கு வழங்கிய பின்னர் ஏனையவற்றை வழங்காது அங்கேயே பதுக்கியதாகவும் தெரியவருகின்றது.

இந்த மூடைகள் நீண்ட காலமாக தமது கட்டடத் தொகுதியில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதுடன் கடந்த வாரம் லொறி ஒன்றின் மூலம் சில சீமெந்து மூடைகள் வேறு இடத்திற்கு எடத்துச் செல்லப்பட்டுள்ளன எனவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் கொட்டகைகளில் வாழ்ந்துவரும் நிலையில் அவற்றை அவர்களுக்கு வழங்காது வீண்விரயம் செய்தவர்கள் மீது இதுவரைக்கும் எவரும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவரவில்லை எனவும் வவுனியா பொது அமைப்புக்களின் சார்பில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பல இலட்சம் ரூபா பெறுமதியான சீமெந்து மூடைகள் பழுதடைந்தமைக்கு பிரதேச செயலாளரின் கடமை மீதான அசமந்த போக்கே காரணம் எனவும் தெரிவிக்கப்படுவதுடன் இது தொடர்பில் விசாரணை செய்வதற்கென தற்போது வவுனியா அரசாங்க அதிபரினால் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக