1990ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 21 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் முஸ்லிம் ஆயுதக்குழுவால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட 17 அப்பாவி தமிழ் மக்களின் நினைவுகூறும் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வை முன்னிட்டு பிரதான வீதிகளிலும் உள்வீதிகளிலும் வெள்ளை,கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
புதுக்குடியிருப்பு பொதுமக்களால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இந்த நினைவுதின நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இத்தினங்களை ஏன் நாங்கள் நினைவுகூறுகின்றோம் என்றால் வரலாறுகள் எம்மிடம் இருந்து அழியக்கூடாது.அவை பாதுகாக்கப்படவேண்டும்,போற்றப்படவேண்டும் என்பதற்காகவே.
இந்த நிகழ்வுகளை எந்தவொரு இனமோ,நபரோ தங்களுக்கெதிரானதாக கருதக்கூடாது. காத்தான்குடியில் இடம்பெற்ற படுகொலையை அவர்கள் தொடர்ச்சியாக நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.அது அவர்களுக்கு இருக்கக்கூடிய உரிமை.அதனை நாம் மறுக்கமுடியாது.
அதேபோன்றுதான் கடந்த 30வருட போராட்ட காலத்தில் 90ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையானது தொடர்ந்துகொண்டேசென்றது.
இந்த ஆயுதப்போராட்டம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டிருந்தாலும் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற எமது மக்களின் நலனுக்காக பாடுபடுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியான உரிமையினை பெறுவதற்கு பாடுபடும்.
எந்தவித போராட்ட முன்னெடுப்புகளிலும் ஈடுபடாத இந்த அப்பாவி தமிழ் மக்களின் படுகொலையானது காலம்காலமாக நினைவுகூரப்படவேண்டும்.அதனை செய்யவேண்டியது எமது சமூகத்தின் தலையாய கடமையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக