சனி, 6 நவம்பர், 2010

மெனிக்பாம் மக்கள் பலவந்தமாக இடமாற்றம்

செட்டிக்குளம் மற்றும் மெனிக்பாம் வலயம் 4 நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்களை பலவந்தமாக கதிர்காமர் நிவாரண கிராமத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த இடமாற்றம் மக்களின் விருப்பத்திற்கு மாறாக மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.எம்.எம்.சாள்ஸ் தெரிவிக்கையில் அரசின் உயர்மட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவிற்கு அமைய மெனிக்பாம் வலயம் 4 நிவாரணக் கிராமம் மூடப்படவுள்ளதாகவும் அங்கு தங்கியிருந்ந முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மூவாயிரம் பேர் அருகாமையில் உள்ள கதிர்காமர் நிவாரணக் கிராமத்திற்கு இடமாற்றும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக