'வீர வணக்கம் வீர வணக்கம்' என்ற கொட்டொலி முழங்க தோழர் செங்கொடியின் இறுதி வணக்க நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.கட்சிப்பிரதிநிதிகள் இயக்க பிரதிநிதிகள் கலைஞர்கள் தோழர்கள் தொண்டர்கள் என பன்முகதளங்களில் இருந்து பெருந்திரளானவர்கள் பங்கெடுத்திருந்தனர்.
உணர்வெழுர்ச்சியுடன் இடம்பெற்ற இந்த இறுதிவணக்க நிகழ்வரங்கில் தோழர் செங்கொடியின் திருவுருவச்சிலையினை பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் திறந்து வைத்தார்.
ஏழு மணி நேர தொடர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட தோழர் செங்கொடியின் உடலம் அரங்கில் வைக்கப்பட்டது.
பிரதிநிதிகளின் உணர்வெழுர்ச்சி உரைகளைத் தொடர்ந்து தோழா செங்கொடியின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக