வியாழன், 8 செப்டம்பர், 2011

அழிவுகளை பான் கீ மூன் இணைத் தலைமை நாடுகளுக்கு அறிவித்துள்ளார்




இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு, யுத்தம் நிறைவடைந்த நிலையில் விமானம் மூலம் சென்று அப்பகுதியை பார்வையிட்டதுடன் அங்குள்ள முழுமையான அழிவுகளை இணைத்தலைமை நாடுகளுக்கு பான் கீ மூன் அறிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.


இதன்போது அங்கு அமைக்கப் பட்டிருந்த மெனிக்பாம் அகதி முகாமின் பரிதாப நிலைப் பற்றி கூறியுள்ளதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
பாதுகாப்பு வலயத்தில் ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதை செய்மதிப் படங்கள் வெளிப்படுத்தியுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. 24 மணித்தியாலங்கள் இலங்கையில் இருந்து பாதிக்கப்பட்ட பலபகுதிகளை பார்வையிட்டதுடன் இது தொடர்பாக இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தூதுக் குழுவுக்கு விளக்கத்தை 2009 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி இரவு விமான நிலையத்தில் வைத்துக் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விஜயம் தொடர்பில் நோர்வே நாட்டுத் தூதுவரான டோர் ஹெற்றெம்; கேட்டபோதே, யுத்தம் இடம்பெற்ற பகுதியில் அமைதியற்ற துன்பகரமான நிலைமையே காணப்பட்டதாக பான்கீமூன் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
போரின் காரணமாக 2 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் அடைப்பட்ட நிலையில் ஊட்டச் சத்து இன்றி இருக்கின்றதாகவும் கூறியுள்ளார். ஏனைய முகாம்களைப் பார்க்கும்போது இம்முகாம் மிகவும் மோசமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக