சர்வதேச விசாரணையே தேவை: அமெரிக்க கொங்கிரஸ் உறுப்பினர் ஹொண்டா
சிறிலங்காவில்
நடந்த உரிமை மீறல்களை விசாரிக்க அனைத்துலக விசாரணை ஒன்றே தேவை என அமெரிக்க
காங்கிரஸ் உறுப்பினர் மைக்கல் ஹொண்டா கூறியுள்ளார். சிறிலங்காவில் கடந்த
ஆறு தசாப்தங்களாக சிறுபான்மை இனத்தவர்க்கு அநீதி இழைக்கப்பட்டுவருவதாகவும்
சிறிலங்காவில் ஒரு நியாயமான நடு நிலையான விசாரணை நடக்கும் என்பதனை
எதிர்பார்க்க முடியாது எனவும் மைக்கல் ஹொண்டா கூறியுள்ளார். காங்கிரஸ்
அவையில் மைக்கல் ஹொண்டா உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக