புதன், 26 அக்டோபர், 2011

காட்டுமிராண்டிகளின் உலகை தன் மரணத்தால் உணர்த்திய கடாபி..


ஆலைகள் மட்டும் உலகத்தை வெப்பமாக்கவில்லை.. காட்டுமிராண்டி செயல்களும்தான்...

கேணல் கடாபி 42 வருட சர்வாதிகார ஆட்சியின் வடிவம்..

உலகத்தில் அதிக காலம் ஆட்சியில் இருந்த பெரும் பணக்கார சர்வாதிகாரி..
உலகத் தலைவர்கள் எல்லாம் மண்டியிட்டு அவருடைய வாசலில் நின்றதை கண்ணாரக் கண்டு மமதை கொண்ட மனித வடிவம்..

வெள்ளி, 14 அக்டோபர், 2011

சிறிலங்கா அரசு தமிழர்க்கு நல்ல தீர்வை வழங்காது:


சிறிலங்கா அரசாங்கமானது ஈழத்தமிழர் பிச்சினைக்கு நீடித்து நிலைக்கக் கூடியதான ஒரு தீர்வை ஒருபோதும் வழங்கமாட்டாது எனத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் ராவுல் ரொமேவா ருயுடா, நீதியையும் உண்மையையும் நிலை நாட்டி மனித உரிமையைப் பேணுவதன் மூலமே நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் செனல்-4 வின் இலங்கையின் ‘கொலைக் களம்’ ஆவணக் காணொளி காண்பிக்கப்படுவதற்கு முன்னரே அவர் இந்தக் கருத்தினை தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த செனல்-4 ஆவணக் காணொளியின் தயாரிப்பாளரான கெலம் மெக்யார், தனது குற்றச் செயல்களை மறைப்பதன் மூலம் நாட்டில் ஒரு போதும் இன ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது என்பதனைய சிறிலங்கா அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்

வெள்ளி, 7 அக்டோபர், 2011

தேசியத் தலைவர் பிரபாகரனின் திரைப்பட ரசனை.

தேசியத் தலைவர் அவர்கள் சிறந்த திரைப்பட ரசிகர் என்பது நாடறிந்த விடயம். அவர் கூடுதலாகத் தமிழ், ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்ப்பார். இது அவருடைய சிறு வயதில் தொடங்கிய பழக்கம். அந்தக் கால யாழ்குடா நாட்டில் ஆங்கிலப் படங்கள் யாழ் நகர் றீகல் தியேட்டரில் மாத்திரம் காட்டப்பட்டன.

செவ்வாய், 4 அக்டோபர், 2011

தமிழகத்தின் பதற வைக்கும் ஈழ அகதி முகாம்கள்!

இந்தியாவில் இருந்து கொண்டு தமிழீழம் கிடைக்க அரும்பாடுபட்டு வரும் வெத்து வேட்டுக் கட்சிகள் கொஞ்சம் உங்களை நம்பி வந்தவர்களின் கொட்டில்களையும் அவர்களின் சீரழிந்த வாழ்க்கையையும் போய் பார்க்கலாமே...
தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதி முகாம் ஒன்றுக்குள் வெளியாட்கள் நுழைவது என்பது மிகக் கொடுமையானது.
அதையும் மீறிய நுழைவு என்பது பல கட்ட பலத்த பாதுகாப்புக்கும் மனதை புண்படுத்தும் விசாரணைகளுக்கும் உட்பட்டது.
கட்டுநாயக்காவில் நுழைந்த கரும்புலி வீரனின் மனநிலைக்கு ஒப்பானது.
இவற்றையும் தாண்டி முகாம்களுக்குள் நுழைந்தால் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர்களிடம் நான்கு கேள்வி கேட்க பழக முடியாது... புகைப்படம் எடுக்க முடியாது....
இப்படியாக நவீனத்துவமான வதை முகாம்கள் தான் தமிழகத்திலுள்ள ஈழத்தமிழர் அகதி முகாம்கள்.
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள உச்சம்பட்டி ஈழத்தமிழர்கள் அகதி முகாம்.

திங்கள், 3 அக்டோபர், 2011

சர்வதேச விசாரணையே தேவை: அமெரிக்க கொங்கிரஸ் உறுப்பினர் ஹொண்டா

Michel Honda


சிறிலங்காவில் நடந்த உரிமை மீறல்களை விசாரிக்க அனைத்துலக விசாரணை ஒன்றே தேவை என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் மைக்கல் ஹொண்டா கூறியுள்ளார். சிறிலங்காவில் கடந்த ஆறு தசாப்தங்களாக சிறுபான்மை இனத்தவர்க்கு அநீதி இழைக்கப்பட்டுவருவதாகவும் சிறிலங்காவில் ஒரு நியாயமான நடு நிலையான விசாரணை நடக்கும் என்பதனை எதிர்பார்க்க முடியாது எனவும் மைக்கல் ஹொண்டா கூறியுள்ளார். காங்கிரஸ் அவையில்  மைக்கல் ஹொண்டா உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

வீரவில சிறிலங்கா படைமுகாம் பற்றி எரிகிறது




வீரவில சிறிலங்கா படைமுகாமில் நேற்று மாலை இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தை அடுத்து முகாமுக்குள் பற்றிக் கொண்ட தீ நள்ளிரவுக்குப் பின்னரும் எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த பிரபல சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவுக்கு சொந்தமான சனசும விடுதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமிலேயே இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

பாதுகாப்பு வலையத்தினுள் ஒட்டுக் குழுக்களை அனுப்பி மக்களைக் கொன்று புலிகள் மீது பழிபோட்ட அரசு : விக்கிலீக்ஸ்..



முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலையத்தினுள் ஒட்டுக்குழுக்களை இரகசியமாக அனுப்பி வைத்தோம். அந்த ஒட்டுக்குழுக்களும் எமது படையினரும் புலிகளின் முன்னரங்க நிலைகளை உடைக்க மக்களிற்கு உதவினார்கள் என மஹிந்த கூறியுள்ளார். 2009 ஆம் ஆண்டு அமெரிக்க துணைத்தூதருக்கு மஹிந்த இராஜபக்‌ஷ இத்தகவலை கூரியுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.