சிவில் இராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கையின் கீழ் அபிவிருத்தித் திட்டங்கள், இடர் முகாமைத்துவ செயற்பாடுகள் போன்றவற்றில் ஈடுபடுவதற்காவே நாட்டின் பல பகுதிகளில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ள இராணுவத்தினர் பொலிஸாருக்கு உதவியாக செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் விசேட அதிரடிப் படையினர் தொடர்ந்து கடமையாற்றுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குருநாகல் ஹம்பாந்தோட்டை, புத்தளம், மொனராகலை போன்ற பல்வேறு பிரதேசங்களில் இராணுவனத்தினர் கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக