வெள்ளி, 22 அக்டோபர், 2010

அனைத்துலக தொலைதொடர்பு அமைப்பின் உறுப்புரிமையை சிறீலங்கா இழந்துள்ளது.

அமெரிக்காவின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட அனைத்துலக தொலைதொடர்பு அமைப்பில் உறுப்புரிமையாக சேரும் தகமையை சிறீலங்கா இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனீவாவை தளமாக கொண்ட இந்த சபைக்கு ஆசியா பிராந்தியத்தில் பங்களாதேசம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. 161 நாடுகள் கொண்ட இந்த சபையின் வாக்கெடுப்பில் பங்களாதேசம் 123 வாக்குகளையும், சிறீலங்கா 79 வாக்குகளையும் பெற்றுள்ளது.

பாகிஸ்த்தான் 93 வாக்குகளை பெற்றுள்ளது. அமெரிக்கா அரசின் ஆதரவுடன் 1947 ஆம் ஆண்டு அனைத்துலக தொலைதொடர்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக