வெள்ளி, 17 டிசம்பர், 2010

ஏதென்ஸ், ரோம்: பாராளுமன்றங்கள் முற்றுகை


டிசம்பர் 15 , ஏதென்ஸ், ரோம், நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள, கிரேக்க, இத்தாலி பாராளுமன்றங்கள் முற்றுகையிடப்பட்டன. ஏதென்ஸ் நகரில், நவ தாராளவாத கொள்கைகளை முன்மொழிந்த வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டார். ஊர்வலத்தைக் கலைக்க போலீசார் முயன்ற பொழுது, பொது மக்கள் திருப்பித் தாக்கினார்கள். இத்தாலியில் பெர்லுஸ்கோனி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு இடமேபெற்றது. அதிகப்படியான வாக்குகளால் பெர்லுஸ்கோனி தப்பிய போதிலும், ஆத்திரமுற்ற மக்கள்திரள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டது. போலீசார் வன்முறை பிரயோகித்து போராடிய மக்களை விரட்டினார்கள். ஏதென்ஸ், ரோம் ஆர்ப்பாட்டங்களில், மாணவர்கள், தொழிலாளர்கள், வேலையற்றோர் போன்ற பல தரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் பெருமளவில் அணி திரண்டு போராடத் தொடங்கியுள்ளதை பி.பி.சி., சி.என்.என். போன்ற ஊடகங்களே ஏற்றுக் கொண்டுள்ளன. "நவ- தாராளவாத பொருளாதார சீர்திருத்தம் மக்கள் நலனுக்கானது", என்று இப்போதும் சில பொருளாதார அறிஞர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக