
தமிழகத்தில் தற்போது எங்கு எந்த சுபநிகழ்வுகள் நடந்தாலம் தலைவரது படம் தவறாது இடம்பெற்றுவிடுகின்றது. காதுகுத்து நிகழ்வு பிறந்தநாள் நிகழ்வு திருமண விழா கடைதிறப்பு விழா புதுமனை குடிபுகு விழா என்று மங்களகரமாக நடைபெறும் எந்த நிகழ்வாக இருந்தாலும் வரவேற்பு பதாதைகள் வைத்து கொண்டாடுவது தமிழகத்து மரபாகிவிட்டது.
அதிலும் எப்போதுமே உலகத் தமிழர்களின் தலைவராக விளங்கிவரும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது புகைப்படங்கள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளதை பார்க்கமுடிகின்றது. இதுவரை சினிமாவில் காகிதக் கத்தியில் சண்டை போடும் கதாநாயகர்களின் படங்களை அச்சிட்டு பெருமைப்பட்ட தமிழகம் இன்று உண்மையான நாயகன் கரிகாலனது புகைப்படங்களை வடிவமைத்து பெருமகிழ்வடைகின்றது.
இது மாத்திரமல்லாது பிறக்கும் குழந்தைகளிற்கு தலைவரது பெயர் உள்ளிட்ட மாவீரர்களது பெயரினை சூட்டி வரலாறு படைக்கின்றது தமிழகம். எண்பது காலப்பகுதியில் இருந்ததைப் போன்று தற்போது எங்கும் எதிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் மயமாகிவருகின்றது. தற்போதைய தலைமுறையில் ஆக்கபூர்வமாக செயற்பட விளையும் ஒரு பகுதியினர் முன்னிலும் வேகமாக செயலாற்றி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக