செவ்வாய், 26 ஜூலை, 2011

வடக்கில் அரசினால் வலுக் கட்டாயமாகப் பரப்பப்படும் பௌத்தம்!

இலங்கையின் வடக்கில் பௌத்த மதம் வலுக்கட்டாயமாக அரசினால் பரப்பப்படுவதாக சோஷலிச இளைஞர் ஒன்றியம் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது. இன்று இடம்பெற்ற சோஷலிச இளைஞர் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்படி கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய செய்தியாளர் மாநாட்டில் மேலும் கருத்துத் தெரிவித்த ஒன்றியப் பிரதிநிதி,



இலங்கையின் வடக்கிலுள்ள 98 சதவீதமான மக்கள் இந்துக்கள் ஆவர். அங்குள்ள தமிழர்கள் விருப்பத்துடன் புத்த மதத்தை தழுவினால் பிரச்சினையில்லை.

ஆனால் அரசு கட்டாயப் படுத்தி மதம் மாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

தொடர்ச்சியான இச்செயற்பாட்டின் மூலம் புத்த மத எதிர்ப்பு நிலை வடக்கில் உள்ள மக்கள் மத்தியில் உருவாகக் கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக