வியாழன், 11 நவம்பர், 2010

அளவெட்டியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்

அளவெட்டி அழகொள்ளை பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது…

இன்று மாலை 6 மணியளவில் அழகொள்ளை பிள்ளையார் கோயிலுக்கருகில் வைத்து 24 வயதுடைய சஞ்சீவ் என்னும் இளைஞன் மீது இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. படுகாயமடைந்த மேற்படி இளைஞன் உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்கா மாற்றப்பட்டுள்ளார். இரண்டு கைகளிலும் வயிற்றிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக