புலிகளின் தேசத்தில் பெரும் புயல் ஒன்று அடித்தது. அந்தப் புயலின் சீற்றத்தில், கோபுரங்கள் சாய்ந்து வீழ்ந்தன. அங்கிருந்த மூலவர் காணாமல் போனார். மக்கள் விரக்திக்குள் தள்ளப்பட்டார்கள். அழுதார்கள். புலம்பினார்கள். ஆனாலும் நம்பிக்கை தளராமல், மூலவர் மீண்டும் வருவார் என்ற காத்திருத்தலோடு அவர்கள் தங்கள் பாதையில் பயணித்தார்கள்.
சாய்ந்து வீழ்ந்த கோபுரத்தின் பொந்துகளிலிருந்து சில வெளவால்களும் எலிகளும் வெளியே வந்தன. மூலவர் இல்லாத கர்ப்பக்கிரகத்தைப் பார்த்ததும் அவைகளின் சின்னத் தலைகளுக்குள் பெரிய ஆசைகள் உள் நுழைந்தன. தூரப் பறந்து சென்றும் நாடு விட்டு ஓடி வந்தும் கூட்டங்கள் போட்டன. கோபுரத்தின் பொந்திலிருந்து ஏற்கனவே கலைத்துவிடப்பட்ட ஒரு மூத்த வெளவாலும் மூலவரின் சூழலில் இருந்து வந்த எலிகளும் அதற்குத் தலைமை வகிக்க போட்டிபோட்டன.
'சூறாவளி மூலவரையும் சிதைத்து விட்டது. அவர் மீண்டும் வரமாட்டார். அந்த இடத்தை நான் நிரப்புகின்றேன்' என்று அந்த மூத்த வெளவாலும், மூலவர் வருவார் என உதட்டிலும் வரமாட்டார் என உள்ளத்திலும் கொண்ட எலிகளும் அறிகைகள் விட்டன. கைகளுக்கு எட்டாத தூரத்தில் இருந்து மூத்த வெளவால் விட்ட அறிக்கையையும், மறைந்து நின்று மாய எலிகள் விடும் அறிக்கைகளையும் பார்த்து மக்கள் வேதனையிலும் சிரிக்கவே செய்தார்கள். இதனைக்கண்டு மூத்த வெளவாலும் ஊர் மறந்த எலிகளும் மக்களை மனதுக்குள் திட்டின.
'தலைகீழாகத் தொங்கும் உன்னாலும், நாளும் பொழுதும் நாங்கள் சேர்த்து வைத்த சொத்தை அரித்தெடுத்த நீங்களும் எப்படி எங்களுக்குத் தலைவன் ஆக முடியும்?' என்று மக்கள் கேலியாகச் சிரித்தார்கள்.
மூத்த வெளவால் நிமிர்ந்து உட்கார்ந்து நிரூபிக்க முயன்றது. அதனால் முடியவில்லை. தலைகீழாகத் தொங்கியபடியே, 'நான்தான் உங்கள் தலைவன் என்றது. சுயநல எலிகளும் மாறி மாறி எல்லாப்பக்கமும் ஓடிச்சென்று நாங்கள் தான் உங்களுக்கான தலைமையென்றன. மக்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. பேரிழப்பிற்கும், பெரும் அழிவுக்கும் உள்ளான அந்த மக்கள் தங்கள் வேதனைகளையும் மறந்து, பெரிதாகவே சிரித்தார்கள்.
'நீங்கள் இப்போது சிரிப்பதற்கு நான்தானே காரணம். என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டால் நீங்கள் இப்படியே மகிழ்ச்சியாக இருக்கலாம்' என்று தலைகீழாகத் தொங்கியபடியே இரஞ்சியது வௌவால். அதேபோல எலிகளும் ஒற்றைக்காலில் நின்றபடி கெஞ்சின.
'முட்டாள் வெளவாலே மூஞ்சுறு எலிகளே , நாங்கள் சிரித்தது மகிழ்ச்சியினால் அல்ல, எங்கள் சூரியத் தேவன் பூமிக்கு நிமிர்ந்தே நிற்க முடியாத நீங்கள் தலைவனாக வருவதா...? உங்களுடைய ஆசையின் பரிதாபத்தைப் பார்த்தே நாங்கள் சிரிக்கின்றோம்' என்று மக்கள் கேலியாகக் கூறினார்கள்.
கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற மூத்த வெளவால், மனதுக்குள் கறுவிக்கொண்டது. தன்னை ஏற்காத அந்த மக்களைத் தண்டிக்க எண்ணியது. தன்னுடன் கூட்டுச் சேர்ந்த ஒரு வெளவாலை தலைமைச் செயலகத்திற்குத் தலைவராக்கியது. இன்னும் சில நாடு கடந்த வெளவால்களைக் கொண்டு, 'நாடு கடந்த அரசு' ஒன்றை அமைத்து, தனக்கு நம்பிக்கையான ஒரு மனிதரை அதற்குத் தலைவன் ஆக்கியது. நாடு கடந்த வெளவால்களால் அந்த மனிதன் சிறை பிடிக்கப்பட்டு, மூத்த வெளவாலின் கட்டளைகளை நிறைவேற்றும் பொம்மை ஆக்கப்பட்டான். வஞ்சக எலிகளும் சும்மாயிருக்கவில்லை செயலகத்தை ஒட்டடையடித்தன, வட்டுக்கோட்டையை ஞாபகப்படுத்தின, பேரவைகளையும் சபைகளையும் உருவாக்கி பேய்க்காட்டின அப்போதும் மக்கள் வேதனையுடன் சிரித்துக்கொண்டார்கள்.
மூத்த வெளவால் அந்த மக்களை கருவறுக்க முடிவு செய்தது. அவர்களது பகை நாடான சிங்கங்களின் தேசத்திற்குத் தகவல் அனுப்பியது. அங்குள்ள வெளவால்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. 'புலிகளின் தேசத்தை அடிமைப் படுத்த இதுவே தருணம்' என்று ஆலோசனை கூறியது. இதனைக்கண்ட எலிகளும் சதிகாரர்களுடனும் சாகசக்காரர்களுடனும் கூட்டுச்சேர்ந்தது.
'புலிகளின் தேசத்திலிருந்து புலம்பெயர்ந்த மக்களை 'நாடு கடந்த அரசு' என்ற வெளவால் பொறிக்குள் சிக்க வைக்கலாம். அதற்குள் சிக்க மறுப்பவர்களுக்குள் தலைமைச் செயலகத்தின் பொறுப்பு வெளவால் மூலம் குழப்பங்களை உருவாக்கலாம். அதற்கு நான் பொறுப்பு. எனக்கு என்ன தருவீர்கள்?' என்று கேட்டது. எலிகளும் தங்கள் இருப்பை தக்கவைக்கவும் தலைமைப்பீட கனவுக்காகவும் கூடாதா கூட்டங்களுடன் கூட்டுச்சேர முடிவு செய்தன. ஆனால், பின்னால் திரியும் சின்ன எலிகளுக்கு இவைகள் மறைக்கப்பட்டன.
'புலிகளின் தேசத்திற்கு உன்னையே தலைவனாக நியமிக்கின்றோம். அதுவரை, உனது விசுவாசத்தை எங்கள் சிங்க தேசத்திற்குக் காட்டு' என்று மூத்த வௌவாலுக்கு சிங்க தேசத்து வெளவால்கள் கட்டளை இட்டன. இதைப்போன்றே புலிகளின் தேசத்து மக்களை கறுவறுத்த அன்னிய இனத்து எலிகள் எம்மினத்து எலிகளுக்கு வாக்குறுதிகள் தந்தன.
'மூத்த வெளவாலின் சதிகளையும் நம்மூர் எலிகளின் தந்திரங்களையும் உணர்ந்து கொண்ட புலிகளின் தேசத்து மக்கள், அதற்குள் சிக்காமல் தப்பித்துக் கொண்டார்கள். மூத்த வெளவால் கோபத்தின் உச்சிக்கே சென்றது. சிங்க தேசத்திலிருந்து கட்டளைகள் பறந்தன. புலம்பெயர் வெளவால்களும், தலைமைச் செயலக வெளவால்களும், நாடு கடந்த வெளவால்களும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டங்கள் கூடின. 'புலிகள் தேசத்தின் புலம்பெயர் மக்களை கருவறுத்தால் மட்டுமே, மூத்த வெளவாலின் ஆசை நிறைவேறும். எங்களுக்கும் தொங்குவதற்குப் புதிய கோபுரங்கள் கிடைக்கும். எனவே, நாங்கள் இங்கே ஒரு கோபுரத்தை உருவாக்குவோம், அடங்க மறுக்கும் புலிகள் தேசத்து மக்களை அடைத்து, அடக்கி அடிபணிய வைப்போம்' என்று உறுதி எடுத்தன. மூத்த வௌவாலின் முறுக்குத்தனத்தைக்கண்ட முடிச்சவிக்கி எலிகளும் முன்னைநாள் எலிகளும் செயலகம் வாழ் எலிகளும் ஒன்று சேர்ந்து மந்திராலோசனை செய்தன. வௌவால்களுடன் வழமையை விட காத்திரமாக அறிக்கைப்போரிலும் சதிகளிலும் ஈடுபட்டன.
வெளவாலகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, 'வெளவால்கள் நடுவம்' என்ற சபையை உருவாக்கின. 'புலிகளின் தேசத்துத் தடைகளைத் தகர்ப்போம்' என்ற கோசத்துடன் புலிகளின் தேசத்துப் புலம்பெயர் மக்களை அழைத்தன. எலிகள் இதனைக் கண்டு நகைத்தன. அதற்கு பதிலாக வழமைபோல் தூற்றல்கள் நாறின. மக்கள் அப்போதும் வேடிக்கையாகச் சிரித்தனர். வெளவால்களுக்கும் எலிகளுக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை.
சிங்க தேசத்திலிருந்து கட்டளைகள் பறந்தன. உடனடியாக, புலிகள் தேசத்தின் புலம்பெயர் மக்களைக் குழப்பும்படி தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. எலிகளின் தலைமைச் செயலகத்தை நிராகரிக்கிறோம். வெளவால்களின் தலைமைச் செயலகமே, உங்களுக்கு வழிகாட்டும்' என்று வெளவால்களின் தலைமைச் செயலகத்திலிருந்து அறிக்கைகள் வெளிவந்தன. அதனைத்தொடர்ந்து வௌவால்களின் தலைமைச்செயலகத்தை நிராகரிக்கின்றோம் எலிகளின் தலைமைச்செயலகமே தொடர்ந்து நாடகமாடும் என்று எலிகளின் செயலகத்தினூடாக அறிக்கைகள் பட்டையைக்கிளப்பின.
புலிகள் தேசத்தின் புலம்பெயர் மக்கள் அப்போதும் சிரித்துக்கொண்டனர். நாங்கள் நேராக நிற்காதவரை, மனிதர்கள் எவரும் எங்களை மதிக்கப் போவதில்லை. நாங்கள் சொல்வதைக் கேட்கவும் போவதில்லை என்ற நிலையிம் எதுவுமே முடியாத தங்களது நிலையைப் பார்த்து வெளவால்களுகளுக்கும் எலிகளுக்கும் அழுகை வந்தது.
புலிகள் தேசத்தின் புலம்பெயர் மக்கள் மூலவரின் வருகைக்கான முன்னோட்டத்தை உணர்ந்த நிலையில் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள் நல்லது இனி நடக்குமென்று.
சாய்ந்து வீழ்ந்த கோபுரத்தின் பொந்துகளிலிருந்து சில வெளவால்களும் எலிகளும் வெளியே வந்தன. மூலவர் இல்லாத கர்ப்பக்கிரகத்தைப் பார்த்ததும் அவைகளின் சின்னத் தலைகளுக்குள் பெரிய ஆசைகள் உள் நுழைந்தன. தூரப் பறந்து சென்றும் நாடு விட்டு ஓடி வந்தும் கூட்டங்கள் போட்டன. கோபுரத்தின் பொந்திலிருந்து ஏற்கனவே கலைத்துவிடப்பட்ட ஒரு மூத்த வெளவாலும் மூலவரின் சூழலில் இருந்து வந்த எலிகளும் அதற்குத் தலைமை வகிக்க போட்டிபோட்டன.
'சூறாவளி மூலவரையும் சிதைத்து விட்டது. அவர் மீண்டும் வரமாட்டார். அந்த இடத்தை நான் நிரப்புகின்றேன்' என்று அந்த மூத்த வெளவாலும், மூலவர் வருவார் என உதட்டிலும் வரமாட்டார் என உள்ளத்திலும் கொண்ட எலிகளும் அறிகைகள் விட்டன. கைகளுக்கு எட்டாத தூரத்தில் இருந்து மூத்த வெளவால் விட்ட அறிக்கையையும், மறைந்து நின்று மாய எலிகள் விடும் அறிக்கைகளையும் பார்த்து மக்கள் வேதனையிலும் சிரிக்கவே செய்தார்கள். இதனைக்கண்டு மூத்த வெளவாலும் ஊர் மறந்த எலிகளும் மக்களை மனதுக்குள் திட்டின.
'தலைகீழாகத் தொங்கும் உன்னாலும், நாளும் பொழுதும் நாங்கள் சேர்த்து வைத்த சொத்தை அரித்தெடுத்த நீங்களும் எப்படி எங்களுக்குத் தலைவன் ஆக முடியும்?' என்று மக்கள் கேலியாகச் சிரித்தார்கள்.
மூத்த வெளவால் நிமிர்ந்து உட்கார்ந்து நிரூபிக்க முயன்றது. அதனால் முடியவில்லை. தலைகீழாகத் தொங்கியபடியே, 'நான்தான் உங்கள் தலைவன் என்றது. சுயநல எலிகளும் மாறி மாறி எல்லாப்பக்கமும் ஓடிச்சென்று நாங்கள் தான் உங்களுக்கான தலைமையென்றன. மக்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. பேரிழப்பிற்கும், பெரும் அழிவுக்கும் உள்ளான அந்த மக்கள் தங்கள் வேதனைகளையும் மறந்து, பெரிதாகவே சிரித்தார்கள்.
'நீங்கள் இப்போது சிரிப்பதற்கு நான்தானே காரணம். என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டால் நீங்கள் இப்படியே மகிழ்ச்சியாக இருக்கலாம்' என்று தலைகீழாகத் தொங்கியபடியே இரஞ்சியது வௌவால். அதேபோல எலிகளும் ஒற்றைக்காலில் நின்றபடி கெஞ்சின.
'முட்டாள் வெளவாலே மூஞ்சுறு எலிகளே , நாங்கள் சிரித்தது மகிழ்ச்சியினால் அல்ல, எங்கள் சூரியத் தேவன் பூமிக்கு நிமிர்ந்தே நிற்க முடியாத நீங்கள் தலைவனாக வருவதா...? உங்களுடைய ஆசையின் பரிதாபத்தைப் பார்த்தே நாங்கள் சிரிக்கின்றோம்' என்று மக்கள் கேலியாகக் கூறினார்கள்.
கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற மூத்த வெளவால், மனதுக்குள் கறுவிக்கொண்டது. தன்னை ஏற்காத அந்த மக்களைத் தண்டிக்க எண்ணியது. தன்னுடன் கூட்டுச் சேர்ந்த ஒரு வெளவாலை தலைமைச் செயலகத்திற்குத் தலைவராக்கியது. இன்னும் சில நாடு கடந்த வெளவால்களைக் கொண்டு, 'நாடு கடந்த அரசு' ஒன்றை அமைத்து, தனக்கு நம்பிக்கையான ஒரு மனிதரை அதற்குத் தலைவன் ஆக்கியது. நாடு கடந்த வெளவால்களால் அந்த மனிதன் சிறை பிடிக்கப்பட்டு, மூத்த வெளவாலின் கட்டளைகளை நிறைவேற்றும் பொம்மை ஆக்கப்பட்டான். வஞ்சக எலிகளும் சும்மாயிருக்கவில்லை செயலகத்தை ஒட்டடையடித்தன, வட்டுக்கோட்டையை ஞாபகப்படுத்தின, பேரவைகளையும் சபைகளையும் உருவாக்கி பேய்க்காட்டின அப்போதும் மக்கள் வேதனையுடன் சிரித்துக்கொண்டார்கள்.
மூத்த வெளவால் அந்த மக்களை கருவறுக்க முடிவு செய்தது. அவர்களது பகை நாடான சிங்கங்களின் தேசத்திற்குத் தகவல் அனுப்பியது. அங்குள்ள வெளவால்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. 'புலிகளின் தேசத்தை அடிமைப் படுத்த இதுவே தருணம்' என்று ஆலோசனை கூறியது. இதனைக்கண்ட எலிகளும் சதிகாரர்களுடனும் சாகசக்காரர்களுடனும் கூட்டுச்சேர்ந்தது.
'புலிகளின் தேசத்திலிருந்து புலம்பெயர்ந்த மக்களை 'நாடு கடந்த அரசு' என்ற வெளவால் பொறிக்குள் சிக்க வைக்கலாம். அதற்குள் சிக்க மறுப்பவர்களுக்குள் தலைமைச் செயலகத்தின் பொறுப்பு வெளவால் மூலம் குழப்பங்களை உருவாக்கலாம். அதற்கு நான் பொறுப்பு. எனக்கு என்ன தருவீர்கள்?' என்று கேட்டது. எலிகளும் தங்கள் இருப்பை தக்கவைக்கவும் தலைமைப்பீட கனவுக்காகவும் கூடாதா கூட்டங்களுடன் கூட்டுச்சேர முடிவு செய்தன. ஆனால், பின்னால் திரியும் சின்ன எலிகளுக்கு இவைகள் மறைக்கப்பட்டன.
'புலிகளின் தேசத்திற்கு உன்னையே தலைவனாக நியமிக்கின்றோம். அதுவரை, உனது விசுவாசத்தை எங்கள் சிங்க தேசத்திற்குக் காட்டு' என்று மூத்த வௌவாலுக்கு சிங்க தேசத்து வெளவால்கள் கட்டளை இட்டன. இதைப்போன்றே புலிகளின் தேசத்து மக்களை கறுவறுத்த அன்னிய இனத்து எலிகள் எம்மினத்து எலிகளுக்கு வாக்குறுதிகள் தந்தன.
'மூத்த வெளவாலின் சதிகளையும் நம்மூர் எலிகளின் தந்திரங்களையும் உணர்ந்து கொண்ட புலிகளின் தேசத்து மக்கள், அதற்குள் சிக்காமல் தப்பித்துக் கொண்டார்கள். மூத்த வெளவால் கோபத்தின் உச்சிக்கே சென்றது. சிங்க தேசத்திலிருந்து கட்டளைகள் பறந்தன. புலம்பெயர் வெளவால்களும், தலைமைச் செயலக வெளவால்களும், நாடு கடந்த வெளவால்களும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டங்கள் கூடின. 'புலிகள் தேசத்தின் புலம்பெயர் மக்களை கருவறுத்தால் மட்டுமே, மூத்த வெளவாலின் ஆசை நிறைவேறும். எங்களுக்கும் தொங்குவதற்குப் புதிய கோபுரங்கள் கிடைக்கும். எனவே, நாங்கள் இங்கே ஒரு கோபுரத்தை உருவாக்குவோம், அடங்க மறுக்கும் புலிகள் தேசத்து மக்களை அடைத்து, அடக்கி அடிபணிய வைப்போம்' என்று உறுதி எடுத்தன. மூத்த வௌவாலின் முறுக்குத்தனத்தைக்கண்ட முடிச்சவிக்கி எலிகளும் முன்னைநாள் எலிகளும் செயலகம் வாழ் எலிகளும் ஒன்று சேர்ந்து மந்திராலோசனை செய்தன. வௌவால்களுடன் வழமையை விட காத்திரமாக அறிக்கைப்போரிலும் சதிகளிலும் ஈடுபட்டன.
வெளவாலகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, 'வெளவால்கள் நடுவம்' என்ற சபையை உருவாக்கின. 'புலிகளின் தேசத்துத் தடைகளைத் தகர்ப்போம்' என்ற கோசத்துடன் புலிகளின் தேசத்துப் புலம்பெயர் மக்களை அழைத்தன. எலிகள் இதனைக் கண்டு நகைத்தன. அதற்கு பதிலாக வழமைபோல் தூற்றல்கள் நாறின. மக்கள் அப்போதும் வேடிக்கையாகச் சிரித்தனர். வெளவால்களுக்கும் எலிகளுக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை.
சிங்க தேசத்திலிருந்து கட்டளைகள் பறந்தன. உடனடியாக, புலிகள் தேசத்தின் புலம்பெயர் மக்களைக் குழப்பும்படி தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. எலிகளின் தலைமைச் செயலகத்தை நிராகரிக்கிறோம். வெளவால்களின் தலைமைச் செயலகமே, உங்களுக்கு வழிகாட்டும்' என்று வெளவால்களின் தலைமைச் செயலகத்திலிருந்து அறிக்கைகள் வெளிவந்தன. அதனைத்தொடர்ந்து வௌவால்களின் தலைமைச்செயலகத்தை நிராகரிக்கின்றோம் எலிகளின் தலைமைச்செயலகமே தொடர்ந்து நாடகமாடும் என்று எலிகளின் செயலகத்தினூடாக அறிக்கைகள் பட்டையைக்கிளப்பின.
புலிகள் தேசத்தின் புலம்பெயர் மக்கள் அப்போதும் சிரித்துக்கொண்டனர். நாங்கள் நேராக நிற்காதவரை, மனிதர்கள் எவரும் எங்களை மதிக்கப் போவதில்லை. நாங்கள் சொல்வதைக் கேட்கவும் போவதில்லை என்ற நிலையிம் எதுவுமே முடியாத தங்களது நிலையைப் பார்த்து வெளவால்களுகளுக்கும் எலிகளுக்கும் அழுகை வந்தது.
புலிகள் தேசத்தின் புலம்பெயர் மக்கள் மூலவரின் வருகைக்கான முன்னோட்டத்தை உணர்ந்த நிலையில் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள் நல்லது இனி நடக்குமென்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக